Tuesday, October 6, 2020

புங்குடுதீவு யுவதி கடந்த வாரமும் யாழ் வந்தார்: திருமண நிச்சயதார்த்தம் நடந்தது!

 கொரோனாவுடன் அடையாளம் காணப்பட்ட புங்குடுதீவு யுவதிக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த தகவல் வெளியாகியுள்ளது.


மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்த புங்குடுதீவு யுவதிகள் இருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.


அவர் கடந்த 3ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததாக வடக்கு சுகாதார திணைக்களம் அறிவித்திருந்தது.


எனினும், அவர் கடந்த 26ஆம் திகதியும் யாழ்ப்பாணம் வந்துள்ளார். யாழ் வந்த பின்னர் அவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மீண்டும் 28ஆம் திகதி மீண்டும் கம்பஹா திரும்பியுள்ளார்.


அதன் பின்னர் 3ஆம் திகதி மீண்டும் திரும்பி வந்துள்ளார்.


அவர் 3ஆம் திகதி திரும்பி வந்த பயண விபரமே, வடக்கு சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.


மீசாலையை சேர்ந்த ஒருவருடன் நடந்த திருமண நிச்சயதார்த்தத்தில் பலர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, கொரோனா தொற்று இல்லையென பரிசோதனை முடிவில் அறியப்பட்ட மற்றைய யுவதியின் பிறந்ததினம் கடந்த 30ஆம் திகதி கொண்டாடப்பட்டுள்ளது. அதில் இருநூறுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP