Monday, August 22, 2011

திரு முத்துத்தம்பி பரராஜசிங்கம்

புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், செட்டிக்குளம் 2ம் பாமில் வசித்தவரும் தற்போது ஆனந்தபுரம் 23 கிளிநொச்சியில் வசித்தவருமாகிய முத்துத்தம்பி பரராஜசிங்கம் அவர்கள் 20-08-2011 சனிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதி, பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விசாலாட்ச்சி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா(இந்தியா), சுரேந்திரன்(கனடா), மாலதி(கனடா), சிறிவதனி, சுமித்திரா(இலங்கை), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவப்பிரியா(கனடா), சற்குணராஜா(கனடா), சிவக்குமார், லோகேஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தருமலட்சுமி, தெட்சணாமூர்த்தி, கமலாஷனி, லோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, நல்லசேகரம்பிள்ளை, சந்திரமதி, நடராசா, ஏகாம்பரம், சரஸ்வதி, மாணிக்கவாசகர், பரமேஸ்வரி, சுப்பிரமணியம், தில்லையம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜோதிகா, சாரங்கன், யதுசியா, கீர்த்திகா, அட்சயா, அகல்யா, அபினியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின், பூதவுடல் 23-08-2011 செவ்வாய்க்கிழமை அன்று திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சுதாகரன் - மகன் — கனடா
தொலைபேசி: +14166275337
குணன் - மருமகன் — கனடா
தொலைபேசி: +14167459038
செல்லிடப்பேசி: +16473009038
சிவகுமார் - மருமகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94775999955
லோகேஸ்வரன் - மருமகன் — இலங்கை
செல்லிடப்பேசி: +947705503852
.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP