புங்குடுதீவு வீரம்புளியடி வீதியைப் புனரமைக்குமாறு மக்கள் வேண்டுகோள்.
புங்குடுதீவுப் பகுதியில் உள்ள வீரம்புளியடி வீதியைப் புனரமைத்துத் தருமாறு அவ் ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேற்றைய தினம் இடம்பெற்ற புங்குடுதீவு சங்கத்தார்கேணி வீதி புனரமைப்புத் தொடர்பான ஆரம்ப நிகழ்வில் இக் கோரிக்கை கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ்ப்பாணப் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மரியதாசன் ஜெகு, வேலணை பிரதேச சபைச் செயலாளர் கெ.தவராசா மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு மேற்படி வீதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இதேவேளை இவ் வீதிப் புனரமைப்புத் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment