Tuesday, March 29, 2011

நெடுந்தீவு – குறிகாட்டுவான் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம் .

யாழ். நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச்சேவை இன்று திங்கட்கிழமை முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

பழுதடைந்த நிலையில் பல மாதங்களாக திருத்தப்படாது காணப்பட்ட இப்படகு, மீண்டும் திருத்தப்பட்டு இன்று முதல் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடவுள்ளது.

நெடுந்தீவு – குறிகாட்டுவான் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள், இப்படகுச்சேவை குறித்து யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடம் அண்மையில் மகஜரொன்றை கையளித்திருந்தனர். இதனையடுத்தே இப்படகுச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP