யா. புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் வித்தியாலய, வருடாந்த இல்ல மெய்வல்லுந் திறனாய்வு -2015
யா. புங்குடுதீவு மேற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுந் திறனாய்வுப் போட்டி இன்று (04.03.2015) புதன்கிழமை பிற்பகல் 12.30மணியளவில் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய அதிபர் திருமதி. யோ. விநாயகமூர்த்தி அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு. ஜீ.வீ. இராதாகிருஷ்ணன் (ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர், தீவக வலயம்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு. பொ. சிவானந்தராஜா (கோட்டக்கல்விப் பணிப்பாளர், வேலணை) திரு. தா. சுந்தரராசா (பழைய மாணவர் கிராம உத்தியோகத்தர்), திரு. சு. செல்வகுமார் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் – ஆரம்பக்கல்வி), செல்வி பொ. ஜமுனாதேவி (அறங்காவலர் – வட இலங்கை சர்வோதயம் புங்குடுதீவு) ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததுடன், கௌரவ விருந்தினர்களாக திரு. டெ.யூட்கிங் (சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கிறிஸ்தவம்), திரு. தி. கிருபாகரன் (தலைவர் தனியார் சிற்றூர்தி சேவை சங்கம் புங்குடுதீவு), செல்வி க. பத்மசிறி (கிராம சேவையாளர்), செல்வி செ. செல்வதனா (பொது முகாமையாளர் ப.நோ கூ. சங்கம்), திருமதி த.சுலோசனா (பொருளாளர், புங்குடுதீவு அபிவிருத்தி மக்கள் ஒன்றியம்) ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
நிகழ்வுகளைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கலும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. தகவல் &
புகைப்படங்கள்…. திருமதி சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு.
நிகழ்வுகளைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கலும் இடம்பெற்று நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது. தகவல் &
புகைப்படங்கள்…. திருமதி சுலோசனாம்பிகை தனபாலன், புங்குடுதீவு.
0 comments:
Post a Comment