Monday, February 23, 2015

திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள்

அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் - சுதுமலை மானிப்பாயை , வசிப்பிடமாகவும் ,கொண்ட திருமதி தையல்நாயகி ஞானசம்பந்தன் அவர்கள் 13-02-2015 வெள்ளிக்கிழமை அன்று சுதுமலையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்ற, அல்லைப்பிட்டி உடையார் செல்லத்துரை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்ற பண்டிதர் ஆ . சி . நாகலிங்கம் தங்கமுத்து தம்பதியினரின் அன்பு மருமகளும், சுதுமலை தெற்கு திரு . ஞானசம்பந்தன் (பிறப்பு இறப்பு விவாகப்பதிவாளர், சமாதான நீதவான் - சுதுமலை , மானிப்பாய் ) அவர்களின் அன்பு மனைவியும், திருமதி பவானி ஸ்ரீதரன் (லண்டன்) அவர்களின் அன்பு தாயாரும் திரு ஸ்ரீதரன் (லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார். இவர் காலஞ் சென்ற தவவிநாயகம் ( முன்னாள் கிராமத் தலைமைக்காரர் , முன்னாள் கிராமசபைத்தலைவர் - அல்லைப்பிட்டி ) , வேலாயுதபிள்ளை ( ஸ்ரீ முருகன் ஐிவலறி - மட்டக்களப்பு ) , சிவயோகலட்சுமி , நடேஸ்வரி மற்றும் நடேசபிள்ளை ( பிரபல தொழிலதிபர் மட்டக்களப்பு , யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். திருமதி கிருஸ்ணாம்பாள் ( பிரான்ஸ் ) , திருமதி இராசம்மா ( பிரான்ஸ் ) , காலஞ் சென்ற இரத்தினசபாபதி ( முன்னாள் தபாலதிபர் சமாதான நீதவான் - அல்லைப்பட்டி ) காலஞ் சென்ற சச்சிதானந்தன் ( முன்னாள் சிறுவர் பாதுகாப்பு ஆணையார் - இலங்கை ) திருமதி மங்கையக்கரசி ( யாழ்ப்பாணம் ) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார். சங்கரன் , கரிகரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் தனுஷ்கா , நிலா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 18 - 02 - 2015 புதன் கிழமை காலை 10 மணிக்கு சுதுமலை தெற்கு பதிவாளர் வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரிகைகளுக்காக அன்னாரின் பூதவுடல் தாவடி இந்துமயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ் அறிவித்திலை உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம். தகவல் : திரு . ஞானசம்பந்தன் - கணவர் +94 (0) 21 225 57 64திருமதி . பவானி ஸ்ரீதரன் - மகள் +94 (0) 77 159 84 46திரு . நடேசபிள்ளை - சகோதரன் + 94 (0) 77 634 24 89

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP