Tuesday, November 12, 2013

திரு பொன்னையா நாகரத்தினம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி !

திரு பொன்னையா நாகரத்தினம் ( புங்குடுதீவு - 3  )
திதி: 13/11/2013

ஆண்டு மூன்று சென்றாலும் ஆறிடுமோ எம் துயர்?
ஈருயிரும் ஒருயிருமாய் இருவரும் வாழ்ந்தோமே ஐயா!
உத்தமரே, ஐயாவே, நாம் இருவரும் சேர்ந்து , வாழ்ந்த நாட்களும்,உந்தன் நிழலுருவமும் என் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் என் கண் முன்னே நிழலாடுதையா !

எங்கள் ஐயாவே, எங்கள் அன்புத் தெய்வமே,
எங்களுக்கு சீரும்,சிறப்போடும் வாழ்வமைத்த எங்கள் குல விளக்கே !
உங்களின் இனிமையான குரலோசையும்,
உங்களின் வெண்ணிறை ஆடையோடும், உங்களின் தூய உருவமும் எங்களின் கண்முன்பே நிற்குதையா!

மூன்றாண்டு காலம் கரைந்தோடினாலும்  எங்கள் கவலை தீராது ஐயாவே!! நாம் வாழும் காலம்யாவும்  எமக்கு வழித்துணையாக இருந்து வழி காட்டிடுவீர் .

உங்களின் ஆத்மா சாந்திக்காக தினமும் இறைவனை பிராத்தித்து நிற்கின்றோம் ...

தகவல்: குடும்பத்தினர்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP