Saturday, April 28, 2012

புங்குடுதீவின் நலன்விரும்பிகளின் கவனத்திற்கு!!!

சிறு துளி பெருவெள்ளம்

புங்குடுதீவில் இயங்கி வரும் சா்வோதயம் எனும் சமூக சேவை நிறுவனம் ஆனது பல வழிகளிலும் அங்குள்ள மக்களிற்கு சேவையாற்றி வருகின்றது, இது யாவரும் அறிந்த உண்மை!

இந்நிறுவனத்தால் பல கிராமங்களில் வாரஇறுதி நாட்களில் அறநெறிப்பாடசாலைகள் பல நலன்விரும்பிகளின் உதவியடன் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. 

மடத்துவெளி எனும் கிராமத்தில் இயங்கி வந்த அறநெறிப் பாடசாலையானது சில தவிர்க்க முடியாத காரணங்களால் இடமாற்றம் செய்யப்பட்டு அங்குள்ள முருகன் கோவில் மடத்தில் தற்போது இயங்கி வருகின்றது. இம்மடமானது பாழடைந்த நிலையில் இருந்தது இதனைப் புதுப்பிப்பதற்கு கிட்டத்தட்ட 300,000/= ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்தொகையானது அந்நிறுவனத்திற்கு ஒரு பாரிய தொகையாகும்,

ஆகவே இந்நிறுவனமானது மென்மேலும் வளர எமதூா் மக்களின் பங்களிப்புக்கள் மிக மிக அசியமானது. உதவி செய்ய விரும்புவோர் நேரடியாக அங்குள்ளவர்களுடன் தொடா்பு கொண்டு உங்கள் உதவிகளை செய்யலாம்.

மேலதிக தொடா்புகளிற்கு
புஸ்பா, ஜமுனா
சர்வோதயம்
புங்குடுதீவு,
தொலைபேசி இலக்கம்--0094213214341. 0094778010491.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

முக்கிய குறிப்பு இது நான் அங்கு சென்று கண்னால் பார்த்த சேதி ஆகவே இச்செய்தியானது நான் அணில்பிள்ளைபோல் அவா்களின் சேவைக்கு உதவி செய்யும் நோக்கிலேயே இதை வரைகின்றேன். நன்றி வணக்கம்.

என்றும் அன்புடன்
பிரபாகர் (பாபு)

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP