Saturday, November 5, 2011

திரு ஆறுமுகம் தில்லைநேசன்(ஈசன்)


திரு ஆறுமுகம் தில்லைநேசன்(ஈசன்)
(சிவசக்தி ரெக்ஸ்ரைல் உரிமையாளர்(முன்னாள்),
குளியாப்பிட்டி)
புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், குளியாப்பிட்டி மற்றும் பெரேரா லேன், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் தில்லைநேசன்(ஈசன்) அவர்கள் 05.11.2011-சனிக்கிழமையன்று
இறைபதமடைந்தார் .
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் (பிரபல வர்த்தகர்,குளியாப்பிட்டி) மற்றும் சறோஜினி (கனடா)தம்பதியினரின் அன்பு மகனும்,02 ஆம் வட்டாரம்,மண்டைதீவைச் சேர்ந்த தர்மலிங்கம்-விஜயலெட்சுமி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,ரஜனியின் பாசமிகு கணவரும்,அசோக்ரமணா,பிருத்வி(மாணவர்கள்,கொ.இந்துக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ் சென்ற இராசலட்சுமி மற்றும் கலைநேசன்(குளியாப்பிட்டி),கோபாலகிருஸ்ணன்(கனடா), இராதாகிருஸ்ணன்(கனடா), விஜயலட்சுமி(கொழும்பு), சிவநேசன்(குளியாப்பிட்டி), நாகேஸ்வரி(கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ரமேசன்(ஜேர்மனி), சபேசன்(கனடா), மகேசன்(ஜேர்மனி), ரமணி(கனடா), மகாலிங்கம், நளினி, அருள்மொழி, றோகினி, விக்னேஸ்வரன், கிரிதரன், தரணி ஆகியோரின் மைத்துனரும், சிவகுமார்(கனடா), மஞ்சுளாநிதி(கனடா) ஆகியோரின் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07.11.2011-திங்கட்கிழமை இல:63 பெரேரா லேன்,வெள்ளவத்தையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று, பிற்பகல் 02.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக தெகிவளை கல்கிசை பொதுமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் :

குடும்பத்தினர்.
தொலைபேசி இலக்கம்:-0779019104.
பெரேரா லேன்,வெள்ளவத்தை,
கொழும்பு-06 

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP