Tuesday, March 8, 2011

சொந்த மண்,தொலைந்தவன் !!


வயல்வெளிபார்த்து
வறட்டி தட்டி
ஓணாண்பிடித்து
ஓடையில்குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோபடித்தநான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறுஅறையில்குறுகிப்படுத்து
சிலமாதம்போர்தொடுத்து
வாங்கிவிட்டவேலையோடு
வாழுகிறேன்கணிப்பொறியோடு !

சிறிதாய்த்தூங்கி
கனவுதொலைத்து
காலை உணவுமறந்து
நெரிசலில்சிக்கி
கடமைஅழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசுபார்க்க !

மனசுதொட்டு
வாழும்வாழ்க்கை
மாறிப்போகுமோ ?

மௌசுதொட்டு
வாழும்வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர்மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்தபந்த
உறவுகளெல்லாம்
ஷிப்பைலாய்
சுருங்கிப்போகுமோ?

வாழ்க்கை
தொலைந்துபோகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய்மடியில்தலைவைத்து
நிலவுமுகம்நான்ரசித்து
கதைகள்பேசி
கவலைகள்மறந்தகாலம்
இனிதான்வருமா ?

இதயம்நனைத்த
இந்தவாழ்வு
இளையதலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா!

:ஊரவன்

0 comments:

Recent Comments

  © 2009 புங்குடுதீவு.info : Freedom is Our Right and Peace is Our Objective.

Back to TOP