Friday, March 10, 2017

அமரர் கந்தையா நாகலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி !!


அமரர் கந்தையா நாகலிங்கம்

மலர்வு : 02/09/1929                                 உதிர்வு : 20/02/2016

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரம் சந்தையடியைப் பிறப்பிடமாகவும், பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா நாகலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே
இன்றுடன் ஒரு ஆண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!

உங்களையே உலகமென
உறுதியாய் நாமிருக்க
ஏன் வின்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ!

ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா ஆண்டவனின் திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்
மகேஸ்வரன் குடும்பம்(ஜெர்மனி)


 எங்கள் குடும்பத்து உறவுகளின் நினைவுகள் 



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.